தேடல் விடியல் தரும்

/* திருட்டு சீடன் */

ஒரு ஜென் துறவி தியானத்தில் இருக்கையில் ஒரு திருடன் வந்து அவரைப் பயமுறுத்தினான். அவரோ சிறிதும் கலங்காமல், "உனக்குத் தேவையானது அந்தப் பெட்டியில் உள்ளது. வேண்டுமானால் வேண்டும் வரை எடுத்துக் கொள்" என்றார். அவனும் மீதி கொஞ்சம் வைத்து விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேற நினைக்கையில் துறவி, "பொருளை எடுத்தால் அவருக்கு நன்றி சொல்ல வேண்டாமா?" என்று கேட்க, அவனும் நன்றி சொல்லி விட்டு சென்றுவிட்டான். பின்பு பிடிபட்டுக் கொண்டான். சாட்சிக்கு துறவியை வரவழைத்தவுடன் அவர் சொன்னார், "இவருக்கு நான் தான் பணத்தையும் பொருட்களையும் கொடுத்தேன். அவர் அதற்கு நன்றி கூடத் தெரிவித்தார்" என்றார். அத்திருடன் பின்னாளில் சிச்சிரி கோஜுன் என்னும் அத்துறவியின் மிகச் சிறந்த சீடரானார்.

*****************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக