தேடல் விடியல் தரும்

என் சகோதரன்

மண்ணிலே பிறந்தாலும் 
மறையும் முன் இணையா 
இதயங்கள் மத்தியில் 
நம்மையிணைத்த இணையத்திற்க்கு 
நன்றிகள் கோடி!!!!

யாரும்  பெருமைகொள்ளோர்  

தன்னைப்பற்றி தானே எழுதி 

ஒர்வரியும் அறியிலேன்  

உனைப்பற்றி எழுத - ஏனெனில் 
என்னில் நீ !!!

என்ன இருக்கிறது 

தனித்து எழுத ?
நீ வேறு நான் வேறா ?

புன்னகை பிடிக்கும் 

எனை எள்ளி நகையாடும் 
உன்குணம்  பிடிக்கும் 
எல்லாம்  இப்படி 
பிரித்தெழுத ஆசையாம் 

ஆனால் உனைபிரிக்க 

மனமில்லை இதில்கூட !!!!

இமையிணைவதை 

தடுப்போன் எவருமிலோன் 
இணைவோம் சகா 
பிரிவது எத்தனைமுறையாயினும் !!!

தூயதுதான் 

அன்னைபோல என் 
அன்பும் காரணமில்லாமல் 
வருவதால்!!!

வார்தைகளாக்கலாம் 

நம் நேசத்தை 
வாசிக்க - நட்பின் 
சுவாசத்தை என்செய்வேன்!!

பிறப்பால் மாறுபட்டாலும் 

இணைந்துவிட்டோம் - இனி 
எவனுக்கும் துணிவில்லை 
ஒருதுளியும் 
நம்மைபிரிக்க!!







வா பகையே வா!!

வா பகையே வா!!

முதுகேறிக் குத்தாமல்

முன்வந்து நெஞ்சேறிமிதி!



முளையிலே கிள்ளாமல்

முளைக்கவிட்டதேனென்று

மூஞ்சியிலே காரித்துப்பு!



செம்புணல் செவியேறி

செவ்விழி தோன்றியும்

செயல்படாதேனென்று

சங்கறுத்துப் போ!



வா பகையே வா!!

முதுகேறிக் குத்தாமல்

முன்வந்து நெஞ்சேறிமிதி!



கைகட்டி வாய்பொத்தி

கருமங்களையேன் கண்டா

யெனவிழிரண்டும் குருடாக்கிப் போ!!



மெய்யுரைக்க மறுக்கு

மென்வா யுதடுகளை

கிழித்தெரிந்து போ!!



வா பகையே வா!!

முதுகேறிக் குத்தாமல்

முன்வந்து நெஞ்சேறிமிதி!



குற்றம் கண்டுகொந்

தளிக்காததேன் என்றென்

உணர்வுகளை வேரறுத்துப்போ!!



உனைவாழ விட்டகாரணமாய்

இனிவாழதே என்றுசொல்லி

ஆவியினை பிரித்தெடுத்துப்போ!!



வா பகையே வா!!

முதுகேறிக் குத்தாமல்

முன்வந்து நெஞ்சேறிமிதி!



--

என்றும் அன்புடன் உங்கள் சகா

**பயமறியான்**