தேடல் விடியல் தரும்

வா பகையே வா!!

வா பகையே வா!!

முதுகேறிக் குத்தாமல்

முன்வந்து நெஞ்சேறிமிதி!



முளையிலே கிள்ளாமல்

முளைக்கவிட்டதேனென்று

மூஞ்சியிலே காரித்துப்பு!



செம்புணல் செவியேறி

செவ்விழி தோன்றியும்

செயல்படாதேனென்று

சங்கறுத்துப் போ!



வா பகையே வா!!

முதுகேறிக் குத்தாமல்

முன்வந்து நெஞ்சேறிமிதி!



கைகட்டி வாய்பொத்தி

கருமங்களையேன் கண்டா

யெனவிழிரண்டும் குருடாக்கிப் போ!!



மெய்யுரைக்க மறுக்கு

மென்வா யுதடுகளை

கிழித்தெரிந்து போ!!



வா பகையே வா!!

முதுகேறிக் குத்தாமல்

முன்வந்து நெஞ்சேறிமிதி!



குற்றம் கண்டுகொந்

தளிக்காததேன் என்றென்

உணர்வுகளை வேரறுத்துப்போ!!



உனைவாழ விட்டகாரணமாய்

இனிவாழதே என்றுசொல்லி

ஆவியினை பிரித்தெடுத்துப்போ!!



வா பகையே வா!!

முதுகேறிக் குத்தாமல்

முன்வந்து நெஞ்சேறிமிதி!



--

என்றும் அன்புடன் உங்கள் சகா

**பயமறியான்**