தேடல் விடியல் தரும்

நட்பு செய்!!!

கண்டதும் ஏற்படுவது
காதல் மட்டும்
அல்ல - நட்பும் தான்!


ஜாதி மதம்
மொழி கடந்து
நட்பு செய்வோம் !!



புனிதமானதுதான்
என் நட்பு - காதலை விட


காதல்
இருவருக்கு மட்டும்
ஆனால் - என் நட்பு
உலகில் அனைவருக்கும்!!!


ஆதலின் வாரீர்
நட்பு செய்வோம்
புதியதோர்
புரட்சி பாரதம்
செய்வோம்!!!

கவிதை எழுத

தெரியாவிட்டாலும்
எழுதுகிறேன் இந்த
கவியை!

கவி எழுத
கம்பனாய் பிறக்க
வேண்டியது இல்லை
எழுத தெரிந்தால்
போதுமானது!

எதுகை மோனை
தேவை இல்லை
எழுது கோலும்
வெற்று காகிதமும்
எழுத தெரிந்துஇருத்தலும்
போதுமானது!



கவித்துவம்
தேவை இல்லை
கற்பனையுடன்
இயற்கையை காதலிக்க
தெரிந்தால் போதுமானது !

பெண்ணை நேசிக்க
தேவை இல்லை
தாய் மண்ணை
நேசிக்க தெரிந்தால்
போதுமானது!

காதல் தேவை 
இல்லை - கனவு 
ஒன்றே போதுமானது! 

நேசம் கொள்ளுங்கள் 
குயிலின் குரல் 
மீது மட்டுமல்ல - காகத்தின் 
கரைச்சல் மீதும்!!

இரைச்சலை கூட 
இனிமையாய் கேள் 
எரிச்சல் இல்லாமல்!!

உன்னை நீயே 
காதலி!

புறத்தோடு இணைத்து      
அகத்தையும்
வர்ணித்து பார்!!

புனைந்து புனைந்து 
எழுதிப்பார் - கண்ணில் 
புலனாவதை எல்லாம் 
வர்ணித்துப் பார்!! 

உனக்கும் தெரியாமல் 
வெளிவருவான் - உன்னில் 
உறங்கும் கவிஞன்!!
       

வாழ்ந்து பார்!!!

வாழ்கையை
வாழ்ந்து பார்
உனக்காக அல்ல - பிறருக்காக

புளித்து போன
வாழ்க்கையும் - உனக்கு
பிடித்துப்போய்விடும்!



கதிரவனின் காதல்

காதல் தோல்வியால்
கதிரவன் வடித்த
கண்ணீர் துளிகள்!! - இந்த
நட்சத்திரங்கள்.

சிறகுகளை சிக்கெடுத்துக்கொள் !!

தோழா!!

சிகரங்கள் அழைகின்றன
சிறகுகளை சிக்கெடுத்துக்கொள்!!

சொற்ப தூரமே சென்றுவிட்டு
சொர்க்கம் தெரியவில்லை என
திரும்பி விடாதே!


உடல் வலிக்க உழைத்துபார்
உண்மை புரியும்!!


தேய தேயத்தான்
சந்தனத்தில் மணம்!!


கரைய கரையத்தான்
கற்பூரத்தில் ஒளி


செதுக்க செதுக்கத்தான்
கல்லிலும் சிற்பம்!!


வீழ்ந்துவிட்டோம் என
நினைத்து ஒருபோதும்
வருந்தாதே - மீண்டும்
எழபோவதை நினைந்து 
சந்தோசபடு!

உன் வியர்வையின்
விழுக்காடுகளை வைத்துதான்
வெற்றி கணிக்கப்படுகிறது!!


நீ வீழ்ந்தால்
உனக்கு மரணம்
மட்டும் தான்
வாழ்ந்தால் இந்த
வரலாறே உனக்குச்
சொந்தமாகிவிடும்!

தலை நிமிர்ந்து 
நடந்து பார் - இந்த 
தரணியும் உன் 
தாள் பணியும்!

முடியாது   என
நினைத்து முடங்கி
நின்றால் முட்செடியும்
உன்னை முகம் சுழித்துப் 
பார்க்கும்!  

முயற்சி செய்பவனுக்கு
இமயமும் வழி விடும்
முடியாதவனுக்கு
தலை முடியும்
பெரும் சுமைதான்!!


முயற்சி செய் தோழனே
முடிவினில் உனக்கு
வெற்றியே கிட்டும்!

மயங்காதே

தூரத்தில் வரும்
மங்கையை கண்டு
மயங்காதே!!
அது - உன்
தங்கையாக கூட
இருக்கலாம்!!


நேசம் கொள் !!!









நேசம் கொள்
பெண்ணின் மீது அல்ல
தாய் மண்ணின் மீது!!



நீ கனவில் கண்ட
பெண்ணின் மீது அல்ல
உன்னை கருவில் கண்ட
அன்னை மீது!