தோழா!!
சிகரங்கள் அழைகின்றன
சிறகுகளை சிக்கெடுத்துக்கொள்!!
சொற்ப தூரமே சென்றுவிட்டு
சொர்க்கம் தெரியவில்லை என
திரும்பி விடாதே!
உடல் வலிக்க உழைத்துபார்
உண்மை புரியும்!!
தேய தேயத்தான்
சந்தனத்தில் மணம்!!
கரைய கரையத்தான்
கற்பூரத்தில் ஒளி
செதுக்க செதுக்கத்தான்
கல்லிலும் சிற்பம்!!
வீழ்ந்துவிட்டோம் என
நினைத்து ஒருபோதும்
வருந்தாதே - மீண்டும்
எழபோவதை நினைந்து
சந்தோசபடு!
உன் வியர்வையின்
விழுக்காடுகளை வைத்துதான்
வெற்றி கணிக்கப்படுகிறது!!
நீ வீழ்ந்தால்
உனக்கு மரணம்
மட்டும் தான்
வாழ்ந்தால் இந்த
வரலாறே உனக்குச்
சொந்தமாகிவிடும்!
தலை நிமிர்ந்து
நடந்து பார் - இந்த
தரணியும் உன்
தாள் பணியும்!
முடியாது என
நினைத்து முடங்கி
நின்றால் முட்செடியும்
உன்னை முகம் சுழித்துப்
பார்க்கும்!
முயற்சி செய்பவனுக்கு
இமயமும் வழி விடும்
முடியாதவனுக்கு
தலை முடியும்
பெரும் சுமைதான்!!
முயற்சி செய் தோழனே
முடிவினில் உனக்கு
வெற்றியே கிட்டும்!
தேடல் விடியல் தரும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக