கொள்ளை அடித்தவன்
எல்லாம் அங்கே
பஞ்சு மெத்தையில்
படுத்து புரண்டு
கொண்டு இருக்க - இங்கே வறுமைக்காக
கொள்ளை அடித்தவனோ
கோமணத்தோடு
தெருக்கோடியில்
நிற்கிறான்!!
புரட்சி செய்
கொள்ளைஅடித்தவன்
பணம் கொள்ளை
போகும் வரை!
கைகளே ஆடையவதும்
கண்ணீரே ஆறாவதும்
நினைத்துக் கொண்டு
சேரியில் சிக்கித்தவிக்கும்
சின்னஞ்சிறு ஏழைகளுக்காக
புரட்சி செய்
சத்தமின்றி சேதி
சொல்லி சலனம்
இல்லது சாதி செய்யும்
சாதியத்தை நோக்கி!
களை எடுப்பதாய்ச்
சொல்லி பயிர்களை
அழித்துக் கொண்டு
இருக்கும் யுத்த
நெறிகள் தகர்ந்தோடிட
புரட்சி செய்
அடக்க நினைக்கும்
அந்நியசக்திகள்
அடங்கி போகும்வரை
புரட்சி செய்