தேடல் விடியல் தரும்

/* அனைவரும் சமம்*/

பேங்கீய் என்னும் ஜென் துறவியின் கீழ் பல சீடர்கள் இருந்தனர். அவர்களுள் டைரியோ என்னும் சீடனும் இருந்தான். அவன் நன்கு சமைப்பான். அவனுக்கு வயதான தன் துறவியைக் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று மிக்க ஆசை. ஒரு முறை சோயா பீன்சுடன், கோதுமை மற்றும் பல பொருட்கள் கலந்து மிகச் சுவையான பதார்த்தம் ஒன்றைத் தயாரித்து அனைவருக்கும் வைக்கும் போது குருவுக்கு மட்டும் சிறிது அதிகம் வைத்தான். குரு கோபத்துடன் அவனை அழைத்து, "நான் சாப்பிடக் கூடாது என்று நினைத்தாயோ?" என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.


சீடனோ வருத்தத்துடன் அவர் அறைக் கதவுக்கு வெளியில் நின்று மன்னித்துக் கொள்ளும் படி வேண்டிக் கொண்டான். பதிலே காணோம். மூன்று நாட்கள் ஆகின. கதவே திறக்கப்படவில்லை.

கடைசியில் குருவுக்கு பலத்த குரலில், "நீங்கள் சாப்பிடாமல் வேண்டுமானால் இருங்கள். உங்கள் இளஞ் சீடனும் பசியுடன் தான் இருப்பான் என்பதை மறந்து விடாதீர்கள்!" என்று ஒரு வாக்கியம் கேட்டது. அந்த விநாடியே கதவு திறக்கப்பட்டது.


குரு சீடனிடம், "அனைவருக்கும் கிடைக்கும் உணவே எனக்கும் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீ குருவாகும் போதும் இதை மறக்காதே!" என்றார் 
 
***************************************************************************
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக