கண்ணில் தோன்றி
காமத்தில் முடிவதில்லை
இதயத்தில் தோன்றி
இறக்கும் வரை
கூடவே வருவது
காதல்!
விழிகள் செய்த
போரில் இதயங்கள்
செய்த ஒப்பந்தம்தான்
காதல்!!
யாரும் செய்யலாம்
இந்தக் காதலை
காதலிக்க தெரிந்தால்!
உடலை நோக்கமல்
உள்ளதை பார்ப்பது
உண்மைக்காதல்!
சாதி அறியாதது
காதல்!
மதம் பார்க்காதது
காதல்!
அளக்க முடியாதது
கடலின் சீற்றம்
மட்டுமல்ல - ஆழமான
காதலும்தான்!
உயிரும் உடலும்
வெவ்வேரனாலும்
ஒன்றாக இருப்பது
இனிமைக் காதல்!
அடிமைதான் இந்தக்
காதலுக்கு மனிதனோடு
கடவுளும்!
இறப்பிலும் இனிமை
காண்பது இந்தக்
காதல் மட்டுமே!
காலங்கள் மாறினாலும்
கனவுகள் கலைந்தாலும்
காதலர்கள் அழிந்தாலும்
வாழ்ந்துகொண்டே இருக்கும்
இந்தக் காதல்
என்றும் வாழ்க!
--
என்றும் அன்புடன் உங்கள் சகா
**பயமறியான்**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக