பத்து மாதம் என்னைக்
கருவறையில் வைத்துக்
கற்றுகொடுத்த என்
அன்னைக்கும் !
பாசங்களையும்
வேசங்களையும்
பகுத்துணரும் பக்குவ
எண்ணங்களை வழங்கிய
தந்தைக்கும் !
இவ்வுலக வியாக்கியான
விந்தைகளை உள்ளூரக்
கற்றுகொடுத்த என்
குருவனவர்களுக்கும் !
என்னுள் இருக்கும்
உணர்வுகளுக்கு
உயிர் கொடுக்கும்
தோழர்களுக்கும் !
எனை ஈன்ற இந்த
தேசத்திரு நாட்டிற்கும் !
ஆறறிவு படைத்த
மனிதனாய் என்னை
படைத்திட்ட அந்த
இறைவனுக்கும் !
இத்தரணியில் எப்போதும்
வாழும் இயற்கை அன்னைக்கும்
இந்த "பிழைகளை"
தொடர் எழுத்து வார்த்தைகளாய்
சமர்பிகின்றேன்!!
அன்புடன் உங்கள் சகா
**பயமறியான்**
தேடல் விடியல் தரும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சமர்பியுங்கள் பார்த்து ரசிக்கிறோம்
பதிலளிநீக்கு